பெங்களூரு அருகேயுள்ள கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவரின் மனைவியின் பெயர் மகாதேவி. சிறிய திருட்டில் ஈடுபட்டுவந்த அக்யூத் குமார், ரியல் எஸ்டேட் அதிபர் எனக் கூறி மகாதேவியைத் திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் தினமும் 3 செயின் பறித்தால்தான் வீட்டுக்குள் அனுமதிப்பேன் என்று மனைவி டார்ச்சர் செய்ததன் விளைவாக தற்போது கணவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.