திமுக ஆட்சியில் பொதுமக்கள் கண்ணீர் தான் சிந்தினார்கள் - எப்படி காவிரி தண்ணீர் கொண்டு வர முடியும்

Sathiyam TV 2018-07-17

Views 1

திமுக ஆட்சியில் பொதுமக்கள் கண்ணீர் தான் சிந்தினார்கள், அவர்கள் எப்படி காவிரி தண்ணீர் கொண்டு வர முடியும் என ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் TTV தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறுவது பகல் கனவு என்றும், திமுக ஆட்சியில் பொதுமக்கள் கண்ணீர் தான் சிந்தினார்கள், அவர்கள் எப்படி காவிரி தண்ணீர் கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், அம்மா முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து ஊழல் அமைச்சர்கள் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடம் இருக்கின்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டு மக்களுக்கே வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS