கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு

Sathiyam TV 2018-07-17

Views 0

கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க 2016-ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் 3 முறை முயற்சித்திருந்தார். ஆனால் நேரம் ஒதுக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அனைத்து கட்சி குழு நேரம் கேட்டிருந்தது. இந்த முறையும் பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. அத்துடன் தேவைப்பட்டால் மத்திய உணவு, பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தியுங்கள் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் ராம்விலாஸ் பஸ்வானை சந்திக்க முடியாது என பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS