தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்- வீடியோ

Oneindia Tamil 2018-06-07

Views 1.6K

குடும்ப தகராரில் பெற்ற தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போலிஸ்கார மகனை போலிசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் . தேனியில் ஆயுதப்படை காவலர் பிரிவில் பணியாற்றி வரும் விக்னேஷ்பிரபு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து ஒரு வருடமாக தனது தந்தையுடன் வசித்து வந்தார் . இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்த மகனிடம் அவரது தந்தை செல்வராஜ் பேசிக்கொண்டிருந்தார் .அப்போது மகனின் திருமண வாழ்க்கை குறித்து பேசிய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.அப்போது ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார் அதில் அவரது தந்தை செல்வராஜ் துடிதுடித்து இறந்து போனார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து காவலர் விக்னேஷிடம் விசாரனை நடத்திவருகின்றனர்

des : Police arrested and arrested by police for killing gunman

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS