மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ; அணைக்க போராடும் தீயணைப்பு துறையினர்!

Tamil Samayam 2022-05-26

Views 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி ,கரடி, மான் ,காட்டெருமை காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்நிலையில் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை கண்டமனூர் பீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரிந்து வருகிறது.10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்க சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வெயிலின் தாக்கத்தால் தீப்பற்றியதா? மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS