#DotCom_Tamil #மீண்டும் மஞ்சப்பை இயக்கம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
நெகிழிப் (பிளாஸ்டிக்) பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளின் புழக்கத்தை மக்களிடம் ெகாண்டு வரும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், தடை விதிக் கப்பட்ட நெகிழிப் பொருள் களுக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ள பொருள்கள் குறித்தும், பொருள்களின் தயாரிப்பாளர்கள் குறித்தும் கண்காட்சி இடம்பெற்றிருந்தது. சணல், துணி, பனை ஓலை மூலம் தயா ரிக்கப்பட்ட பொருள்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
“மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருதவேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள்பை,” என்று முதல்வர் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகை யிலான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு கடந்த 2019ல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
#Pls Visit my websites
#newzbuz.in