வீடு, வாசல், உடைமை என அனைத்தையும் இழந்து நிற்கிற கேரளா மக்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே தோள் கொடுத்து நிற்கிறது. எங்கெங்கும் லாரிகள், வேன்கள் எனக் கேரளாவுக்கு தமிழகத்தின் அனைத்து எல்லைகளில் இருந்தும் நிவாரண பொருள்கள் சென்றுகொண்டிருக்கின்றன. கேரளாவுக்குச் சென்று தமிழ்நாடென்று சொன்னால் கட்டிக்கொள்கிறார்கள், தட்டிக் கொடுக்கிறார்கள், கண் கலங்குகிறார்கள், நன்றி சொல்கிறார்கள் கேரள மக்கள். #keralarain #keralafloods2018 #keralaarmy