ஜெயா டிவி அம்மாவுடையது இல்லையா ?

NewsSense 2020-11-06

Views 1

“பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். அம்மா உயிருடன் இருந்தவரைக்கும் அவரை அடைமொழியிட்டு ‘புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா’ என்றெல்லாம் செய்தியில் சொல்லியதே இல்லை. அது தலைப்புச் செய்தியோ, விரிவான செய்தியோ அவரை செல்வி.ஜெ.ஜெயலலிதா என்றே சொல்லியிருக்கிறோம். குறிப்பிட்டிருக்கிறோம். அதனாலேயே கட்சி மீட்டிங்கில் பேசும்போது அவரை அம்மா என்றோ, புரட்சித்தலைவி என்றோ குறிப்பிடவே, நிதானித்துத்தான் பேசுவேன். காரணம், செய்தியில் நான் அவரைப் பெயர் சொல்லி வாசித்துப் பழகி இருந்தது. பொதுவெளியில் அவருடைய பெயரைச் சொல்லிப் பேசிவிடக்கூடாது என்று மெனக்கெடுவேன். அந்தளவுக்கு செய்திகளில் அவரது பெயர்தான் குறிப்பிடப்படும். இது அவர்களுடைய உத்தரவு. ஆனால், சசிகலா கட்சிக்கு வந்தவுடன், பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் அவரை எப்படிக் குறிப்பிட வேண்டும்? ஜெயலலிதாவை எப்படிப் பெயர் சொல்லி செய்திகளில் குறிப்பிட்டோமோ அதேபோன்று திருமதி.வி.கே.சசிகலா என்றுதானே வாசிக்கப்பட வேண்டும்? ஆனால், அவர் பதவியேற்ற உடனேயே அவரை மட்டும் சின்னம்மா என்று அழைக்கச் சொல்லியது நெருடலை ஏற்படுத்தியது. அப்படி என்றால் ஜெயா டிவி அம்மாவுடையது இல்லையா? இவ்வளவு நாளாக யார் கையில் ஜெயா டிவி இருந்தது என்றெல்லாம் ஆதங்கம் எழுந்தது. அதனாலேயே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதே எனக்குச் சரியாகத் தோன்றியது.”

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS