கொரானா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கி, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.