லோகேஸ்வரன் மரணத்தில் மர்மம்-வீடியோ

Oneindia Tamil 2019-03-21

Views 1


சேலம் குகை பகுதியில் உள்ள தனியார் மருந்துக் கடையில் பேளூரை சேர்ந்த லோகேஸ்வரன் கடந்த 20 நாட்களாக பணியாற்றி வந்தார். மருந்து கடைக்கு அருகில் அறை எடுத்து தங்கியிருந்த அவர் காலை 10 மணிக்கு மருந்து கடைக்கு பணிக்கு வருவது வழக்கம். ஆனால் காலையில் லோகேஸ்வரன் நீண்ட நேரம் ஆகியும் வராத காரணத்தால், உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, இடது காலில் ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் செவ்வாய்பேட்டை காவல் துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாகவே லோகேஸ்வரன் இறந்துவிட உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

des : Mystery in the death of Logeswaran

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS