மகனை கொன்று தாய் தற்கொலை ! அதிர்ச்சி தகவல்- வீடியோ

Oneindia Tamil 2018-04-18

Views 8.3K

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கழுத்தை நெறித்து கொலை செய்து தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .திருப்பூரில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்தவர் சேது பணிக்கர் .இவருக்கு ருக்மணி என்ற மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்ட மகனும் உள்ளனர் . இந்நிலையில் அதிகாலையில் எழுந்து விடும் ருக்மணியின் வீட்டுகதவுகாலை நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் கதவை திறக்க முயன்ற போது கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கதவைஉடைத்து பார்த்த பொழுது ருக்மணி தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மகன் நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர். இதனையடுத்துஅனுப்பர்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS