சென்னை சூப்பர் அணியில் விளையாடும் கேப்டன் டோணி, தன்னுடைய பேட்டிங் ஆர்டரை மாற்றி இருக்கிறார். இந்திய அணியில் சரியான அளவிற்கு அவர் கடந்த சில வருடங்களாக தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சென்னை மும்பை அணிகள் மோதும் முதல் ஐபிஎல் 2018 போட்டி வரும் சனிக்கிழமை நடக்க உள்ளது. இதற்காக சென்னை அணி மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறது. இன்னும் சில அணிகள் பயிற்சியே தொடங்காத நிலையில் சென்னை அணி ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்டது. இது போட்டிகளில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.
CSK Dhoni changes batting order in IPL 2018.