மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெ.தேசம் ஆதரவு!

Oneindia Tamil 2018-03-16

Views 950

மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இத்தீர்மானத்தை தெலுங்கு தேசம் ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் ஆந்திராவுக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது.

YSR Congress Party have decided to move a No-Confidence Motion against BJP led NDA government at the Centre on Today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS