ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் இன்று தனி அமைப்பு மற்றும் அதற்கான கொடியை அறிவிக்க உள்ளார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் முதல்வர் நாற்காலியில் அமரவும் முயற்சித்தார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. அப்போது சசிகலா தமது அக்கா மகன் தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலர் என நியமித்தார்.
RK Nagar MLA Dinakaran, nephew of Sasikala will launch a new political party on today.