இது ப்ளாஸ் நியூஸ் இல்லை, ப்ளாஸ் ஸ்ரைக் தமிழிசை ஆவேசம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-05

Views 1


தொழிற்சங்கம் என்ற பெயரில் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்களும் பயணிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தாஜன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பேருந்து நிலையத்தில் பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எந்த வித முன் அறிப்பும் இன்றி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகல் பொதுமக்களும் பயணிகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய போது சுமூக தீர்வை தமிழக அரசு எடுக்காமல் இது நாள் வரை மெத்தனம் காட்டியதால் தான் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறினார். திடீரென்று போராட்டம் நடத்தி வருவதால் பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். தமிழக அரசு போக்குவரத்துறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறை வேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் தொழிற்சங்கள் என்ற பெயரில் அரசியல் கட்சினரும் இந்த போராடத்தை திடீரென நடத்தி இருக்க கூடாது என்று தெரிவித்தார்.

Des : Tamilnadu BJP leader Tamilisam Chaudhazan said that the public and the passengers are badly affected by the political parties who are conducting the fight in the name of union.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS