கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் உடலுக்கு நடிகர்கள் அஞ்சலி சென்னையில் நேற்று தூக்கிட்டு இறந்து போன திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் சசிக்குமாரின் மைத்துனருமான அசோக்குமார் உடல் மதுரையிலுள்ள அவரது வீட்டிற்கு இன்று மாலை கொண்டு வரப்பட்டது.மதுரை கோமதிபுரம் அல்லிவீதியிலுள்ள அசோக்குமார் வீட்டின் முன்பாக அவரது உடல் சிறிது நேரம் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
பிறகு எரியூட்டுவதற்காக மேலமடை சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதி அஞ்சலி நிகழ்வில் விஷால், கருணாஸ் உள்ளிட்ட நடிகர்களும், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான அன்புசெழியன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த பிரச்சனையில் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தலையீடு இருந்தாலும் தயாரிப்பாளர் , நடிகர் சங்கம் இதில் சமரசம் ஆகாது தமிழக முதல்வரிடம் இது குறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் விஷால் பேட்டி.
பேட்டி: திரு. விஷால் நடிகர்
IN4NET: Global News Network - Frequently Publishing News, Informations, Articles, Documentaries, Interviews, Debates about Domestic and World Politics, Technology, Sports, Education, Lifestyle, Healthcare, Tourism and General by Writeups, Images, Audios and Videos.