வெறும் கைகளால் கால்வாய் அடைப்பை சரி செய்த சென்னை இன்ஸ்பெக்டர்!- வீடியோ

Oneindia Tamil 2017-11-03

Views 6

அடைப்பு காரணமாக மழை வெள்ளம் சாலையில் ஓடியதால், அக்கறையோடு தானே அடைப்பை சரி செய்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டரின் படம் இணையத்தில் வைரலாக சுற்றி வருகிறது. சென்னையில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. வேப்பேரி ஈ.வெ.ரா. சாலையில், பாதாள சாக்கடைக்குள் நீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதைப் பார்த்த வேப்பேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரகுமார் உடனடியாக கையில் உறை அணிய கூட நேரம் செலவிடாமல், அடைப்பு இருந்த இடத்தில் கையை விட்டு அதை சீர் செய்து தண்ணீர் செல்ல வழி வகை செய்துள்ளார்.

இன்ஸ்பெக்டர்கள் எனப்படுபவர்கள் அந்தந்த காவல் நிலையத்தின் உயர் அதிகாரிகள். தங்கள், காவல் நிலைய சரகத்தில் முதலமைச்சரை போலத்தான் செயல்படுவார்கள். கான்ஸ்டபிள்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக கூட பல இன்ஸ்பெக்டர்கள் மீது புகார்கள் உண்டு.

Pictures of Chennai police inspector Veerakumar who trying to repair water way at Vepery going viral in social media.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS